search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை

    சேலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சரண் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சிவில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    மாணவர் தற்கொலை குறித்து போலீசார் கூறும் போது, ராஜேந்திரனுக்கு போதிய வருமானம் இல்லாததால் அதே பகுதியில் குறைந்த வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். இது சரணுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் அந்த வீட்டுக்கு சென்று பால் காய்ச்சி உள்ளனர். இந்த நேரத்தில் சரண் வீட்டில் தூக்குப்போட்டு இறந்துள்ளார் என்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கு காதல் தோல்வி காரணமா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×