search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×