search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வேப்பந்தட்டை அருகே டாஸ்மாக் கடையில் பணம்- மது பாட்டில்கள் திருட்டு

    வேப்பந்தட்டை அருகே, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம்- எசனை சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக கரிகாலன் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசில் கரிகாலன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×