என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்17 Dec 2020 10:01 AM GMT (Updated: 17 Dec 2020 10:01 AM GMT)
திருக்கோவிலூர் அருகே கணவர் வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் அய்யப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மனைவி மஞ்சுளா(வயது 45). குடிப்பழக்கத்துக்கு அடிமையான குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மஞ்சுளாவுக்கு ஏற்கனவே உடல் நலம் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தனது கணவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன விரக்தியில் இருந்து வந்த மஞ்சுளா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மஞ்சுளாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X