search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயல்வெளியில் நூதன போராட்டம் நடந்த போது எடுத்தபடம்.
    X
    வயல்வெளியில் நூதன போராட்டம் நடந்த போது எடுத்தபடம்.

    தாழக்குடி அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக வயல்வெளியில் நூதன போராட்டம்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தாழக்குடி அருகே வயல்வெளியில் நூதன போராட்டம் நடந்தது.
    ஆரல்வாய்மொழி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாழக்குடி அருகே வயல் வெளியில் நின்று நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் அருளானந்தம் முன்னிலை வகித்தார். இதில், குமரி மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாபு, இலக்கிய அணி மாநில செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட இணை செயலாளர் பிரபா, குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சுனில் குமார், சார்லஸ் தனபால், யாசின் முகமது மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
    Next Story
    ×