என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாழக்குடி அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக வயல்வெளியில் நூதன போராட்டம்
Byமாலை மலர்17 Dec 2020 7:19 AM GMT (Updated: 17 Dec 2020 7:19 AM GMT)
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தாழக்குடி அருகே வயல்வெளியில் நூதன போராட்டம் நடந்தது.
ஆரல்வாய்மொழி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாழக்குடி அருகே வயல் வெளியில் நின்று நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் அருளானந்தம் முன்னிலை வகித்தார். இதில், குமரி மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாபு, இலக்கிய அணி மாநில செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட இணை செயலாளர் பிரபா, குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சுனில் குமார், சார்லஸ் தனபால், யாசின் முகமது மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாழக்குடி அருகே வயல் வெளியில் நின்று நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் அருளானந்தம் முன்னிலை வகித்தார். இதில், குமரி மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாபு, இலக்கிய அணி மாநில செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட இணை செயலாளர் பிரபா, குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சுனில் குமார், சார்லஸ் தனபால், யாசின் முகமது மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X