என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது
Byமாலை மலர்17 Dec 2020 5:54 AM GMT (Updated: 17 Dec 2020 5:54 AM GMT)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது
நெல்லை:
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும், லேசான மழையும் பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் வரையிலும் வெயில் அடித்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேகமாக நிரம்பி வருகிறது. அணை நிரம்புவதற்கு இன்னும் 2.20 அடி நீர்மட்டமே தேவைப்படுகிறது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.95 அடியாக உள்ளது. இதேபோன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 27.50 அடியாகவும் உள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.76 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.25 அடியாகவும் உள்ளது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியதால் மறுகால் பாய்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-37, சேர்வலாறு-33, மணிமுத்தாறு-30, நம்பியாறு-7, கொடுமுடியாறு-10, அம்பை-23, சேரன்மாதேவி 29, நாங்குநேரி-6, பாளையங்கோட்டை-16, நெல்லை-10, தென்காசி-3, கருப்பாநதி-16, கடனாநதி-5 ராமநதி-5, ஆய்க்குடி-7, சங்கரன்கோவில்-8, செங்கோட்டை-2, சிவகிரி-17, குண்டாறு-7.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும், லேசான மழையும் பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் இருந்து மதியம் வரையிலும் வெயில் அடித்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வேகமாக நிரம்பி வருகிறது. அணை நிரம்புவதற்கு இன்னும் 2.20 அடி நீர்மட்டமே தேவைப்படுகிறது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.95 அடியாக உள்ளது. இதேபோன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 27.50 அடியாகவும் உள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.76 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.25 அடியாகவும் உள்ளது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியதால் மறுகால் பாய்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-37, சேர்வலாறு-33, மணிமுத்தாறு-30, நம்பியாறு-7, கொடுமுடியாறு-10, அம்பை-23, சேரன்மாதேவி 29, நாங்குநேரி-6, பாளையங்கோட்டை-16, நெல்லை-10, தென்காசி-3, கருப்பாநதி-16, கடனாநதி-5 ராமநதி-5, ஆய்க்குடி-7, சங்கரன்கோவில்-8, செங்கோட்டை-2, சிவகிரி-17, குண்டாறு-7.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X