search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் சிறைபிடிப்பு
    X
    மீனவர்கள் சிறைபிடிப்பு

    ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

    இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

    ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×