என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை
Byமாலை மலர்14 Dec 2020 8:47 PM GMT (Updated: 14 Dec 2020 8:47 PM GMT)
இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X