search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறி - வாலிபர் கைது

    கொண்டலாம்பட்டியில் பேக்கரி கடைக்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவர் கொண்டலாம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென சரவணனை வழிமறித்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.100-ஐ மிரட்டி பறித்துள்ளார். 

    அப்போது அந்த வாலிபரை அருகில் இருந்தவர்கள் விரட்டி பிடித்து கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரித்ததில் அந்த வாலிபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் புதுக்குறிச்சியை சேர்ந்த நாசர் மகன் அனாஸ் (26) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×