search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடலில் சேறு பூசி பக்தர்கள் வினோத வழிபாடு
    X
    உடலில் சேறு பூசி பக்தர்கள் வினோத வழிபாடு

    கொடைக்கானல் அருகே உடலில் சேறு பூசி பக்தர்கள் வினோத வழிபாடு

    சேற்றை அடித்து வேண்டுவதால் தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். 100 வருடங்களுக்கு மேலாக இந்த வினோத திருவிழா கொண்டாடப்படுகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைகிராமத்தில் 2 வருடத்திற்கு ஒரு முறை சேற்றினை பூசி கொண்டு பக்தர்கள் வினோத முறையில் சேத்தாண்டி கொண்டாட்டம் நடைபெற்றது.

    கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாயம் செய்வதேயே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். கீழ்மலை கிராமத்தில் முக்கிய விவசாய கிராமமான தாண்டிக்குடி கிராமத்தில் பட்டாளம்மன் முத்தாலம்மன் கோவில் திருவிழா துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அம்மனுக்கு பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். முத‌ல் நாளான நேற்று கரியமால் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பட்லாங்காடு, கொடலங்காடு, பண்ணைக்காடு, அரசன் கொடை, காமனூர் உள்ளிட்ட மலைகிராமங்களை சேர்ந்த 1000 கணக்கான பக்தர்கள் வயது வேறுபாடு இன்றியும் ஜாதி வேறுபாடின்றியும் கலந்து கொண்டனர்.

    இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றினை அடித்தும் சேத்தாண்டி வேடம் பூண்டும் ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வழிபட்டனர்.

    சேற்றை அடித்து வேண்டுவதால் தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என இந்த கிராம மக்கள் தெரிவித்தனர். 100 வருடங்களுக்கு மேலாக தொடரும் இந்த வினோத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் இந்த சேற்றை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் ஊருக்குள் விவசாயம் செழிக்கவும், விவசாயத்திற்கு ஏற்ற மழை பொழிய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் சேற்றினை பூசி கொண்டு ஆடி பாடி சென்றனர். 2 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த வினோத திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்த‌ர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×