search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது- முதலமைச்சர்

    நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் 2000 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

    * மருத்துவத் துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி சாதனை படைத்துள்ளோம்.

    * மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்ததன் மூலம் 5,300 பேர் மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

    * ரூ.120 கோடியில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    * தனியார் மருத்துவமனைகளைவிட உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×