search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பாண்டமங்கலம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பெண் பலி

    பாண்டமங்கலம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து பெண் பலியானார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி யசோதா (வயது 37). இவர் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல மாலை அந்த பகுதியிலுள்ள ராஜவாய்க்கால் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி ராஜா வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்துள்ளார்.

    இதைக்கண்ட அவருடன் வேலைக்கு சென்ற மூதாட்டி அப்பகுதியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். யசோதா வாய்க்காலில் விழுந்த பகுதியில் சேறும், சகதியுமாக இருந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    ஆனால் யசோதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×