search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை குழியை காணலாம்
    X
    திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை குழியை காணலாம்

    விழுப்புரத்தில் திறந்து இருக்கும் பாதாள சாக்கடை குழி- விபரீதம் நடக்கும் முன் மூடப்படுமா?

    விழுப்புரத்தில் மூடப்படாமல் இருக்கும் பாதாள சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் விழுப்புரம்- புதுச்சேரி சாலையும் ஒன்று. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எந்தநேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதோடு மக்கள் கூட்டமும் மிகுந்து காணப்படும்.

    இந்நிலையில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் தாலுகா போலீஸ் நிலையம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அந்த பாதாள சாக்கடை குழியின் மூடியை திறந்து கழிவுநீர் அடைப்பை சரிசெய்தனர். அதன் பிறகு குழியை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர்.

    இதனால் அந்த குழி திறந்த நிலையில் இருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் யாரேனும் சற்று அதிவேகமாக வந்தால் நிலைதடுமாறி அந்த பள்ளத்திற்குள் விழும்பட்சத்தில் அவர்களின் கதி அதோகதிதான். திறந்த நிலையில் இருக்கும் அந்த பள்ளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அவ்வழியாக வருபவர்களுக்கு பள்ளம் இருக்கும் இடம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.

    எனவே ஏதேனும் விபரீதம் நடைபெறுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த பாதாள சாக்கடை குழியை மூடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களிக் கோரிக்கையாகும்.
    Next Story
    ×