என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்11 Dec 2020 9:15 AM GMT (Updated: 11 Dec 2020 9:15 AM GMT)
வேப்பந்தட்டை அருகே குப்பை கொட்ட சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி மைதிலி(வயது 24). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக வீட்டின் அருகே தெருவில் உள்ள குப்பைத்தொட்டி நோக்கி சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள், மின்னல் வேகத்தில் வந்து, மைதிலியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி திருடன்... திருடன்... என்று சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து மைதிலி கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி மைதிலி(வயது 24). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக வீட்டின் அருகே தெருவில் உள்ள குப்பைத்தொட்டி நோக்கி சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 3 மர்ம நபர்கள், மின்னல் வேகத்தில் வந்து, மைதிலியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி திருடன்... திருடன்... என்று சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து மைதிலி கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X