search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணு உலை
    X
    கூடங்குளம் அணு உலை

    கூடங்குளம் 2வது அணு உலையில் திடீர் பழுது- 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

    கூடங்குளம் 2-வது அணு உலையில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் 12.50 மணி அளவில் 2-வது அணு உலையில் உள்ள டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உடனே, அணுமின் நிலைய விஞ்ஞானிகள், அணு உலையில் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பழுது காரணமாக 2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    முதலாவது அணு உலையில் தற்போது 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×