search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    ரஜினியின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பா? இல்லையா? என்பதை கூற முடியும்- முத்தரசன்

    நடிகர் ரஜினியின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பு உள்ளதா, இல்லையா என கூற முடியும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது.

    விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

    3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுவரை டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பஞ்சாப் விவசாய சங்க பிரதிநிதிகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது,

    விவசாய குடும்பத்தை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களை ஏன் ஆதரிக்கிறார் என தெரிவில்லை. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

    நடிகர் ரஜினிகாந்தின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பு உள்ளதாக, இல்லையா என கூற முடியும். டிசம்பர் 15,16,17 ஆம் தேதிகளில் இந்திய கம்யூ. மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெறும் என கூறினார்.
    Next Story
    ×