search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்- புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார்

    அடுத்தடுத்த புயல்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்த புயல்கள் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். 

    கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்கிறார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் திருவாரூர், நாகையில் ஆய்வு செய்ய உள்ளார்.
    Next Story
    ×