என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலி
Byமாலை மலர்7 Dec 2020 6:26 AM GMT (Updated: 7 Dec 2020 6:29 AM GMT)
கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை:
அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது 11 வயது மகள் குப்தா ரேவதியுடன் இன்று காலை 7 மணியளவில் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.
குப்தா ரேவதி கடலில் அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது உண்டு. அதன்படி இன்றும் கடலில் இறங்கி குப்தா அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்தது.
அதையும் மீறி அலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ராட்சத அலையில் குப்தா ரேவதி சிக்கினார்.
மகள் விளையாடுவதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, அவளை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் இறங்கினார். அப்போது அவரும் அலையில் சிக்கினார்.
இதனை அங்கிருந்த மீனவர்கள் பார்த்து பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் குப்தா ரேவதியை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
பாலாஜியை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. மீனவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை மீட்க முடியவில்லை.
தனது கண் எதிரே தந்தை கடல் அலையில் சிக்கி போராடி தண்ணீரில் மூழ்கியதை பார்த்த குப்தா ரேவதி கதறி அழுதார். அவரை மீனவர்கள் தேற்றினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடலில் மூழ்கிய பாலாஜியை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால், பாலாஜி கடலில் மூழ்கி பலியானார். காலை 9 மணியளவில் அவரின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்டு போலீசார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அவ்வப்போது போலீசார் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில்தான் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் பாலாஜி தனது மகளுடன் அலைசறுக்கு விளையாடுக்கு சென்று உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பாலாஜி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனது 11 வயது மகள் குப்தா ரேவதியுடன் இன்று காலை 7 மணியளவில் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.
குப்தா ரேவதி கடலில் அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது உண்டு. அதன்படி இன்றும் கடலில் இறங்கி குப்தா அலைசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்தது.
அதையும் மீறி அலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ராட்சத அலையில் குப்தா ரேவதி சிக்கினார்.
மகள் விளையாடுவதை கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, அவளை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் இறங்கினார். அப்போது அவரும் அலையில் சிக்கினார்.
இதனை அங்கிருந்த மீனவர்கள் பார்த்து பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் குப்தா ரேவதியை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.
பாலாஜியை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. மீனவர்கள் எவ்வளவோ போராடியும் அவரை மீட்க முடியவில்லை.
தனது கண் எதிரே தந்தை கடல் அலையில் சிக்கி போராடி தண்ணீரில் மூழ்கியதை பார்த்த குப்தா ரேவதி கதறி அழுதார். அவரை மீனவர்கள் தேற்றினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடலில் மூழ்கிய பாலாஜியை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால், பாலாஜி கடலில் மூழ்கி பலியானார். காலை 9 மணியளவில் அவரின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்டு போலீசார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கடல்சீற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அவ்வப்போது போலீசார் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில்தான் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் பாலாஜி தனது மகளுடன் அலைசறுக்கு விளையாடுக்கு சென்று உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X