என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்6 Dec 2020 10:56 PM GMT (Updated: 6 Dec 2020 10:56 PM GMT)
காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல், இலங்கை பகுதியில் புயலாக கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலை கொண்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பல இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘முத்துப்பேட்டை 10 செ.மீ., மாமல்லபுரம் 7 செ.மீ., குடவாசல், நன்னிலம், தலைஞாயிறு தலா 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, செய்யூர், கொள்ளிடம், சோழவரம், திருப்பூண்டி, சிதம்பரம் தலா 5 செ.மீ., சோளிங்கர், செங்குன்றம், பேராவூரணி, அதிராம்பட்டினம், வேதாரண்யம், பூண்டி, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, மதுக்கூர், நாகப்பட்டினம், திருவாரூர், செம்பரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணி தலா 4 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல், இலங்கை பகுதியில் புயலாக கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலை கொண்டது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பல இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதி, கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘முத்துப்பேட்டை 10 செ.மீ., மாமல்லபுரம் 7 செ.மீ., குடவாசல், நன்னிலம், தலைஞாயிறு தலா 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, செய்யூர், கொள்ளிடம், சோழவரம், திருப்பூண்டி, சிதம்பரம் தலா 5 செ.மீ., சோளிங்கர், செங்குன்றம், பேராவூரணி, அதிராம்பட்டினம், வேதாரண்யம், பூண்டி, பரங்கிப்பேட்டை, மன்னார்குடி, மதுக்கூர், நாகப்பட்டினம், திருவாரூர், செம்பரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, திருத்தணி தலா 4 செ.மீ.’ உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X