என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டை அருகே 2 கார்கள் மோதல் - ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பலி
Byமாலை மலர்5 Dec 2020 11:16 PM GMT (Updated: 5 Dec 2020 11:16 PM GMT)
தேவகோட்டை அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பலியானார்.
தேவகோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 43). பேக்கரி நடத்தி வந்தார். இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தனது அக்காள் செல்வியுடன்(53) ஆர்.எஸ்.மங்கலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் லட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள செலுகை கார்த்திகேயன் தேவகோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் இரவு 7 மணிக்கு தேவகோட்டையை அடுத்த புளியால் அருகே பைபாஸ் சாலையில் வந்த போது எதிரே நாய் குறுக்கிட்டது. இதனால் நிலைதடுமாறிய அந்த காரும், எதிரே கண்ணன் வந்த காரும் நேருக்கு நேர் மோதி நொறுங்கின.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வி, கார்த்திகேயன் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் இறந்த கண்ணன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 43). பேக்கரி நடத்தி வந்தார். இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தனது அக்காள் செல்வியுடன்(53) ஆர்.எஸ்.மங்கலத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை டிரைவர் லட்சுமணன் என்பவர் ஓட்டி வந்தார்.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள செலுகை கார்த்திகேயன் தேவகோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அந்த கார் இரவு 7 மணிக்கு தேவகோட்டையை அடுத்த புளியால் அருகே பைபாஸ் சாலையில் வந்த போது எதிரே நாய் குறுக்கிட்டது. இதனால் நிலைதடுமாறிய அந்த காரும், எதிரே கண்ணன் வந்த காரும் நேருக்கு நேர் மோதி நொறுங்கின.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வி, கார்த்திகேயன் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் இறந்த கண்ணன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X