search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோனிகா
    X
    மோனிகா

    ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர், குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும், அதேபகுதியைச் சேர்ந்த மோனிகா (வயது 23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

    திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி மீண்டும் வெளிநாடு சென்று விடுவார். மோனிகா அடிக்கடி தொலைப்பேசியில் வீடியோகால் மூலம் திருமூர்த்தியோடு பேசி கொள்வார். நேற்று காலை வீட்டின் அறையில் இளம்பெண் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று, மோனிகாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிகா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×