search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 75 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 75 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 88 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 35 பேர், தாரமங்கலத்தில் 6 பேர், காடையாம்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், கொளத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேட்டூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

    நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேர், கோவையில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 82 பேர் குணமடைந்துவிட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
    Next Story
    ×