என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் சிறுமியை கடத்திய தொழிலாளி கைது
Byமாலை மலர்4 Dec 2020 11:16 PM GMT (Updated: 4 Dec 2020 11:16 PM GMT)
சேலத்தில் சிறுமியை கடத்தி சென்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் 17 வயது உடைய தனது மகளை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவபாலன் (வயது 21) என்பவர் கடத்திச் சென்று விட்டார். எனவே மகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் சிவபாலன் சிறுமியுடன் நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். அப்போது போலீசார் விசாரித்தபோது பெண்ணுக்கு 18 வயது ஆகி உள்ளது. எனவே நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் என்று கூறினார். ஆனால் சிறுமிக்கு 18 வயது ஆக 2 நாட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி பெற்றோரிடம் செல்ல மறுத்தார். இதையடுத்து அவளை அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X