search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராசிபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்து 2 பெண்டாட்டிக்காரர் பலி

    ராசிபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்து 2 பெண்டாட்டிக்காரர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகரபுரம் கிராமம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற கருப்பண்ணன் (வயது 40). தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் மற்றும் சங்கீதா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். லோகு என்கிற கருப்பண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கருப்பண்ணன் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மருந்து கடையில் மாத்திரை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. தட்டான் குட்டை ஏரி வழியாக சென்றபோது அவர் ஏரியில் தவறி விழுந்தார்.

    இதில் ஏரியில் மூழ்கி அவர் இறந்தார். நேற்று காலையில் ஏரி தண்ணீரில் அவரது உடல் மிதந்தது. இது பற்றி கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த லோகுவின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அவரது இரண்டாவது மனைவி சங்கீதா ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×