என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்4 Dec 2020 1:51 PM GMT (Updated: 4 Dec 2020 1:51 PM GMT)
ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் ஆண்டிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் விஜய் (வயது 23). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில் இருந்து வந்த 7 வயது மற்றும் 10 வயது உள்ள இரண்டு சிறுமிகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர்.
அப்போது அந்த 2 சிறுமிகளையும் வாலிபர் விஜய் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கடந்த 1-ந் தேதி அன்று 7 வயது சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 7 வயது சிறுமியின் தாயார் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தில் விஜய்யை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X