search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

    ராசிபுரம் அருகே 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் ஆண்டிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் விஜய் (வயது 23). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில் இருந்து வந்த 7 வயது மற்றும் 10 வயது உள்ள இரண்டு சிறுமிகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளனர்.

    அப்போது அந்த 2 சிறுமிகளையும் வாலிபர் விஜய் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கடந்த 1-ந் தேதி அன்று 7 வயது சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து 7 வயது சிறுமியின் தாயார் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தில் விஜய்யை கைது செய்தார்.

    Next Story
    ×