search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகர்கோவிலில் லாட்ஜில் நில தரகர் தூக்குப்போட்டு தற்கொலை

    நாகர்கோவிலில் லாட்ஜில் நில தரகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இடலாக்குடி ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46), நில தரகர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி தனியாக, கோட்டார் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் நாகராஜன் தங்கி இருக்கும் அறையில் இருந்து சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து லாட்ஜ் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு நாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், நாகராஜன் அதிக மதுபோதையில் இருந்ததும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×