search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    சுல்தான்பேட்டையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சுல்தான்பேட்டை ஒன்றிய குழு சார்பில், சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சுல்தான்பேட்டை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சுல்தான்பேட்டை ஒன்றிய குழு சார்பில், சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய சங்க நிர்வாகிகள் பழனிசாமி, ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்குமண்டல இளைஞரணி செயலாளர் காமநாயக்கன்பாளையம் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விவசாய சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், விவசாய சங்க நிர்வாகி ரங்கநாதன், ம.தி.மு.க. கந்தசாமி, கொ.ம.தே.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×