search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த், தமிழருவி மணியன், ரா. அர்ஜுனமூர்த்தி
    X
    ரஜினிகாந்த், தமிழருவி மணியன், ரா. அர்ஜுனமூர்த்தி

    இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ரஜினிகாந்த் டுவீட்

    ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தி தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ரஜினி தெரிவித்துள்ளார்.
    ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில்

    ஜனவரியில் கட்சித் துவக்கம்,
    டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
    #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
    #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  

    வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

    அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!

    என கூறியிருந்தார்.

    அதன்பின், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அதுமக்களின் தோல்வி. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ரஜினியுடன் டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோர் அருகில் நின்றனர். டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தி தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் ரஜினி நியமித்துள்ளார் என செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் ‘‘அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

    ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என ரஜினி காந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×