என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
Byமாலை மலர்3 Dec 2020 11:34 AM GMT (Updated: 3 Dec 2020 11:34 AM GMT)
திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்த புரெவி புயல், பாம்பன் அருகே நகர்ந்து வருகிறது. 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடக்கிறது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது. அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன் அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடக்க இருக்கிறது. அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும், கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில் அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் எனத் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X