என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்
Byமாலை மலர்3 Dec 2020 11:33 AM GMT (Updated: 3 Dec 2020 11:33 AM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. இந்த வகுப்புகளுக்கு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் வந்தனர்.
தர்மபுரி:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனோ பரவல் கட்டுப்படுத்தபட்டதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தமிழக அரசின் உத்தரவுபடி நேற்று முதல் மீண்டும் தொடங்கின. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். உள்ளிட்ட பல்வேறு முதுகலை படிப்பு பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள், எம்.பில்., பி.எச்.டி. ஆகிய ஆராய்ச்சி படிப்புகளை படிப்பவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று கல்லூரிகளுக்கு வந்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்தபடி இருந்தனர்.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரிக்கு நேற்று வந்த மாணவ-மாணவிகள் கல்லூரி வளாக நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களில் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு கைகளை நன்றாக கழுவிய பின்பு கல்லூரி வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளை அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், கொரோனா சிறப்பு நிலை அதிகாரி வேலவன், தேசிய மாணவர் படை கேப்டன் விஜயதேவன், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். மாவட்டத்தில் முதுகலை இறுதியாண்டு வகுப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு வகுப்புகள் நடைபெறும் அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X