search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பஞ்சப்பள்ளி அருகே போலி பெண் டாக்டர் கைது

    தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே 10-ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அனிதா (வயது 47) இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் வந்தது.

    இதையடுத்து பஞ்சப்பள்ளி போலீசார் விரைந்து சென்று போலி டாக்டர் அனிதாவை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×