என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணத்தில் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது56). சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி விஜயா, மூத்த மகன் சிபி சக்கரவர்த்தி (25)வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார். 2-வது மகன் யுக சிற்பி (20). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு செல்ல இருந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். மாதத்தில் 10 நாட்கள் மட்டும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு விஜயா சித்தேரி பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
பகல் 1 மணிக்கு யுக சிற்பியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா வீட்டுக்கு வந்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் யுகசிற்பி பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விரைந்து சென்று யுக சிற்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தாய் விஜயா கொடுத்த புகாரில் தனது மகனுக்கு செல்போனில் கார்ட்டூன் படம் பார்ப்பது மற்றும் ஆங்கில நாவல்கள் அதிகம் பார்ப்பது வழக்கம். அந்த மன உளைச்சலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்