search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய வாலிபர் கைது

    விக்கிரவாண்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்புறம் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை கடந்த 25-ந் தேதியன்று இரவு யாரோ மர்ம நபர், உடைக்க முயற்சி செய்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள கண்காணிப்பு கேமராவையும் உடைத்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரித்ததில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியது விக்கிரவாண்டியை சேர்ந்த சண்முகம் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×