என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் சிறுமி விஷம் குடித்து உயிரிழப்பு
Byமாலை மலர்2 Dec 2020 9:52 AM GMT (Updated: 2 Dec 2020 9:52 AM GMT)
நாமக்கல்லில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தொழிலாளி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45). பஸ் பாடிகட்டும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (20).
இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக பாபு, அவருடைய மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45). பஸ் பாடிகட்டும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (20).
இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக பாபு, அவருடைய மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X