என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே டைல்ஸ் ஷோரூம் கணக்காளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்2 Dec 2020 9:51 AM GMT (Updated: 2 Dec 2020 9:51 AM GMT)
நாமக்கல் அருகே டைல்ஸ் ஷோரூம் கணக்காளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளை அடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
இது குறித்து தியாகராஜன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடினர். இருப்பினும் அவர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டியில் டைல்ஸ் ஷோரூம் நடத்தி வருபவர் பிரதீப் (வயது 34). இந்த ஷோரூமில் கணக்காளராக மின்னாம்பள்ளியை சேர்ந்த தியாகராஜன் (52) வேலை பார்த்து வருகிறார். இவரிடம் நேற்று கடையின் வியாபார தொகையான ரூ.6 லட்சத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் செலுத்திவிட்டு வருமாறு கடையின் உரிமையாளர் பிரதீப் கொடுத்து உள்ளார்.
இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட தியாகராஜன், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து கொண்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், பொட்டைகுட்டைமேடு அருகே தியாகராஜனை வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இது குறித்து தியாகராஜன் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடினர். இருப்பினும் அவர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X