search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

    நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரதேசகுழு செயலாளர் ஜெயமணி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ரெங்கசாமி, பெருமாள், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×