search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    விழுப்புரம் அருகே பள்ளி தாளாளர் வீட்டில் நகை, டி.வி. திருட்டு

    விழுப்புரம் அருகே பள்ளி தாளாளர் வீட்டில் நகை, டி.வி.யை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் வளவனூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் தாளாளராக உள்ளார். இவருடைய மனைவி சுமதி அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டையில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மாலையில் வளவனூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4½ பவுன் நகை மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் டி.வி.யை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×