என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிவர் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி- கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்1 Dec 2020 2:01 PM GMT (Updated: 1 Dec 2020 2:01 PM GMT)
விழுப்புரம் பகுதியில் நிவர் புயலால் சேதமடைந்த விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் சேதமடைந்த விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு ஊராட்சி சொர்ணாவூர், கலிஞ்சிக்குப்பம் மற்றும் சேமங்கலம் ஆகிய பகுதிகளில் நிவர் புயலினால் சேதமடைந்த நெல், வாழை மற்றும் பப்பாளி ஆகிய பயிர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சேதமடைந்த பயிர்களை விடுபடாமல் கணக்கெடுக்கும்படி வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வீடூர் கிராமத்தில் நிவர் புயலினால் சேதமடைந்து நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், திண்டிவனம் தாசில்தார் செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் சேதமடைந்த விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு ஊராட்சி சொர்ணாவூர், கலிஞ்சிக்குப்பம் மற்றும் சேமங்கலம் ஆகிய பகுதிகளில் நிவர் புயலினால் சேதமடைந்த நெல், வாழை மற்றும் பப்பாளி ஆகிய பயிர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சேதமடைந்த பயிர்களை விடுபடாமல் கணக்கெடுக்கும்படி வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வீடூர் கிராமத்தில் நிவர் புயலினால் சேதமடைந்து நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், திண்டிவனம் தாசில்தார் செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X