என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தபால் வாக்குகளால் 15 சதவீத முறைகேடு வாய்ப்பு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
Byமாலை மலர்1 Dec 2020 12:21 PM GMT (Updated: 1 Dec 2020 12:21 PM GMT)
பீகார் தேர்தலை போன்று மற்ற சட்டசபை தேர்தல்களிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில் திமுக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியிருந்தது.
இதனை அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் அக்டோபர் 3-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனை நீக்கும்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை 15 சதவீதம் வாக்குகள் அளவுக்கு முறைகேடு நடக்க வழிவகுக்கும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே, சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட அமைப்புகள், நபர்களுடன் ஆலோசனை நடத்தி நியாயமான மற்றும் ஒளிவுமறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்த வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X