search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேர் கைது

    தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் மாரியம்மன் கோவில் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் மறித்தனர். இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காடுகாவல் பகுதியை சேர்ந்த கண்ணன்(வயது 54) மற்றும் கொடுக்காலூர் பகுதியை சேர்ந்த அய்யாபிள்ளை(70) ஆகியோர் என்பதும், அவர்கள் அனுமதியின்றி வெண்ணாற்றில் இருந்து மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×