search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்

    செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குகிறது.

    * 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம்நகரில் 20% ஆக இருந்த வீடுகள் தற்போது 80% ஆக மாறி உள்ளன.

    * 2015ல் மட்டுமல்ல அதுக்கு முன்பிருந்தே சென்னையில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் இருந்துள்ளது.

    * மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தீர்க்க நிதி ஆதாரமும் தேவை.

    * தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிதி ஆதாரம் இல்லை.

    * மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    * செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

    * அரசின் தொடர் நடவடிக்கையால் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் தற்போது குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×