search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓலப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்
    X
    ஓலப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்

    ஓலப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

    ஓலப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.
    பரமத்திவேலூர்:

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.59 கோடி மதிப்பில் 18 ஊராட்சிகளுக்குட்பட்ட 82 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 766 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் வீடுகளுக்கு குடிநீர் சீரான அழுத்தத்தில் கிடைக்க திட்ட வழிகாட்டுதலின்படி வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    மேலும் குடிநீர் குழாய்கள் சரியான முறையில் பதிக்கப்பட்டு வருகிறதா? மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீர் வழங்க தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் குடிநீர் சரியாக வருகிறதா? என பார்வையிட்டு உறுதி செய்தார்.

    இந்த ஆய்வின்போது மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், முனியப்பன், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகு மயில்சாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×