search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வாழப்பாடி அருகே வாலிபரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்

    வாழப்பாடி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்களை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலத்திற்கு அடியில், தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி., வேல்மணி , இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கானிகேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். அப்போது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து, தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கருகிய நிலையில் இறந்து கிடந்தவர் வாழப்பாடியில் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யும் பெத்த நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் வாழப்பாடி எழில் நகர் பகுதியில் தனியார் பால் ஏஜென்ட் கடை நடத்தி வரும் அவரது சகோதரி வீட்டில் தங்கி, கடைகளுக்கு பால் பாக்கெட்டுகள் போட்டு வந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், சக்தி வேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன், சக்திவேல் இரவு நேரத்தில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 27-ந் தேதி மாலை பால் போடும் வேலை முடிந்ததும் வீட்டை விட்டு வெளியே சென்ற சக்திவேல் வீடு திரும்பவில்லை.

    நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இவரது நண்பர்கள், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு அடியில், இவரை கல்லால் தாக்கி கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சக்திவேலை கொலை செய்துவிட்டு சேலத்தில் தலைமறைவாக இருந்த வாழப்பாடியை சேர்ந்த அவரது நண்பர்களான திருமலை (20) மற்றும் திலீப் (18) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்த உறவினர்கள் சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.

    கொண்டலாம்பட்டி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சேலத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி போலீசார், பொதுமக்கள் ஒப்படைத்த வாலிபர்கள் 2 பேரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×