search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி.
    X
    திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி.

    திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது

    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி, உள்ளிட்ட கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    திருச்சி:

    தென்கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் இதுவாகும். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    மிகவும் பழமையான இந்த மலைக்கோட்டை 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாக உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமான சுவாமி, மட்டுவார்குழலம்மை, மலையின் கீழ் பகுதியில் மாணிக்கவிநாயகர் சன்னதியும் உள்ளது.

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. இதற்காக இன்று மாலை 5.45 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி.
    பின்னர் அங்கிருந்து நேற்று மாலை ஏற்றப்பட்ட பரணி தீபத்திலிருந்து தீபம் ஏற்றப்பட்டு தீப ஜோதியுடன், மேளதாளங்கள் முழங்க உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான இரும்பு கோபுரத்தில், 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியால் திரி தயாரிக்கப்பட்டு, 900 மீட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் செப்புக் கொப்பரையில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

    இதேபோல் திருப்பரங்குன்றம், பழனி, உள்ளிட்ட கோவில்களிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    Next Story
    ×