search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி கலெக்டர்
    X
    தூத்துக்குடி கலெக்டர்

    வெங்காயம், மிளகாய் பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம், மிளகாய் பயிர்களில் ஆரம்ப கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    விளாத்திகுளம், புதூர் வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களில் ஆரம்பகட்டத்தில் தென்படும் இலைப்பேன்கள் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலைகளை மென்று தின்னும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த பூச்சி விரட்டிகள் 100 மில்லி, 10 லிட்டர் டேங்க் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 500 மில்லி, 10 லிட்டர் டேங்க் வீதம் ஒட்டும் திரவம் 150 மில்லி 10 லிட்டர் டேங்க் அளவுக்கு கலந்து கைதெளிப்பான் மூலம் மாலை நேரங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

    வெங்காய பயிரில் குறிப்பாக நடவு செய்த 25 நாள் பயிரில் ஒரு சில இடங்களில் திருகல் நோய் தென்படுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போதும், வெப்பநிலை 23 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவும் போதும் இந்த நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆண்டுதோறும் பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளவும். வெங்காயம் அடிப்பகுதி நனையுமாறு 2.5 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இயற்கை முறையில் 100 கிராம் சூடோமோனாஸ் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்து பரவலை உடனடியாக கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×