search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

    கோபால்பட்டி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபால்பட்டி:

    சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டியை அடுத்த எல்லப்பட்டியை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 30). எம்.சி.ஏ. பட்டதாரியான இவருக்கு வேலை கிடைக்கவில்லை. 

    இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த பிரபுகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×