என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே கஞ்சா விற்ற 6 பேர் கைது
Byமாலை மலர்29 Nov 2020 6:54 AM GMT (Updated: 29 Nov 2020 6:54 AM GMT)
மதுரை அருகே கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை நகரில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பவர்களை பிடிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்ற போது வண்டியூர் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ற சரவணன்(வயது 44) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் 2,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று புதூர் போலீசார் ராமவர்மநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூதாட்டியை பிடித்து விசாரித்த போது ராமவர்மநகரை சேர்ந்த மொக்கத்தாய்(71) என்பதும், அவர் கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கைது செய்தனர். செல்லூர் போலீசார் அகிம்சாபுரத்தை சேர்ந்த முத்துமணிகண்டன்(27), தல்லாகுளம் போலீசார் புதூரை சேர்ந்த வினோத்(34), ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ்(19), எஸ்.எஸ்.காலனி போலீசார் மாடக்குளத்தை சேர்ந்த வினோத்(34) ஆகியோரை கஞ்சா விற்றதாக கைது செய்தனர். இதன் மூலம் நகரில் கஞ்சா விற்றதாக ஒரே நாளில் மூதாட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X