search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திண்டிவனம் அருகே வீட்டு கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை திருட்டு

    திண்டிவனம் அருகே வீட்டு கதவை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 55). இவர் தனது வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு பாண்டுரங்கன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் தனித்தனி அறையில் படுத்து தூங்கினர். 
    இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பேக்கை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். தொடர்ந்து அதில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு பேக்கை அருகில் இருந்த கிணற்றில் வீசி சென்றனர். மேலும் மர்மநபர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான காரை திறந்து அதில் இருந்த பென்டிரைவையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இது குறித்த தகவலின் பேரில் ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×