search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - டிப்ளமோ என்ஜினீயர் பலி

    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவருடைய மகன் ரோகன் (வயது 19). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து இருந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஞானராஜ் மகன் பெல்ஜிஸ் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டு சென்றனர். பெல்ஜிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

    ஆறுமுகநேரி அருகே வேலவன் நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் ரோகன், பெல்ஜிஸ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே அவர்களை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரோகன் பரிதாபமாக உயிரிழந்தார். பெல்ஜிசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×