என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெகமம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்28 Nov 2020 2:06 PM GMT (Updated: 28 Nov 2020 2:06 PM GMT)
நெகமம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம்:
நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி புதுக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் மாராத்தாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள தனது தோட்டத்து வீட்டின் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் முகக்கவசம் அணிந்து வந்தார். பின்னர் மாராத்தாளின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பெரியகளந்தைக்கு செல்ல வழி கேட்டார். அதற்கு மாராத்தாள் பதில் கூறி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அந்த வாலிபர் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாராத்தாள், நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வாலிபரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X