search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பேரளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது வழக்கு

    பேரளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைந் நடத்தி வருகின்றனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது38). இவர் தி.மு.க. கொட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்தநிலையில் கொட்டூரை சேர்ந்தவர் சரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் தன்னை தாக்கியதாக பேரளம் போலீசில் ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார். 

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் சரவணனை கைது செய்யவில்லை. இதையடுத்து சரவணனை கைது செய்யக்கோரியும், கைது செய்யாத பேரளம் போலீசாரை கண்டித்தும் நேற்றுமுன்தினம் பேரளத்தில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வரத.கோ.ஆனந்த் தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட தி.மு.க.வினர் மீது பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×